அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், ‘ராம ஜென்ம பூமி வழக்கில் வழக்கப்பட்ட தீர்ப்பு தனிநபர் வழங்கிய தீர்ப்பு அல்ல. அது, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. எனவே, அது யார் எழுதிய தீர்ப்பு என்று பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை’ என்றார்.

அயோத்தி வழக்கில் அன்றைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அவர் பணி ஓய்வுபெற்றவுடன் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி எஸ்.அப்துல் நசீர் பணி ஓய்வுபெற்ற பிறகு ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதேபோல, அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி அசோக் பூஷண் பணி ஓய்வு பெற்றவுடன் தேசிய அளவிலான தீர்ப்பாயம் ஒன்றுக்கு தலைவராக்கப்பட்டார். இதுவும் பரவலான விமர்சனத்துக்கு ஆளானது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
