முதல்வரின் மகன் தோஷன் இரண்டு முறை முதல்வரை சந்திக்க சென்றார். அவன் தனது தந்தையுடன் நேரத்தை செலவிட விரும்பினார். ஆனால் அவரை முதல்வர் வீட்டிற்கு வர அனுமதிக்கப்படவில்லை. இரண்டு முறையும் எவ்வளவோ நடந்துவிட்டது. தோஷன் சண்டிகரில் குடும்ப நண்பரின் வீட்டில் தங்கி இருந்தார். அவர் மீண்டும் ஒரு முறை முதல்வர் வீட்டிற்கு சென்றார். அவர் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். இனி வரக்கூடாது என்று சொல்லிவிட்டனர். சொந்த குழந்தைகளின் பொறுப்பை ஏற்க முடியாத ஒருவரால்… பஞ்சாப் மக்களுக்கு பொறுப்பு ஏற்க முடியாது.
முதல்வர் அரசியலுக்கு வரக்கூடாது என்று அம்மா விரும்பியதால் அவரை விவாகரத்து செய்ததாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்துக்கு பல காரணங்கள் இருக்கிறது. அந்த கதையை எனது அம்மா சொல்வார். எனது அம்மா எப்போது அதற்கு தயாராகிறாரோ அப்போது அதனை சொல்வார்.
மது பழக்கம், உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான தாக்குதல், பொய் சொல்லும் பழக்கம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக மிரட்டுவது முதல்வர் மானின் பழக்கம் ஆகும்.
சட்டமன்றம், குருத்வாரா அல்லது பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு செல்லும் போது குடிபோதையில் இருப்பார்”‘ என்று ஷீரத் தனது தந்தை மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். பஞ்சாப் முதல்வராக மான் பதவியேற்ற போது அமெரிக்காவில் வசிக்கும் அவரது இரண்டு பிள்ளைகளும் வந்து கலந்து கொண்டனர். ஆனால் மான் இரண்டாவது திருமணம் செய்த பிறகு நிலைமை மாறி இருக்கிறது. ஷீரத்தின் குற்றச்சாட்டு குறித்து மான் எதுவும் தெரிவிக்கவில்லை.
நன்றி
Publisher: www.vikatan.com