மற்ற மாநிலங்களில் முதலமைச்சர் கடிதத்தை கொடுத்தவுடன், ஆளுநர் அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இது யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வரின் கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி, குடியரசுத் தலைவரிடம் இருந்து ஒப்புதல் வர வேண்டும். இவை அனைத்தும் முதல் நாளே நடைபெற்றது. அதை தெரிந்து கொண்ட அவர், ராஜினாமா செய்வதைப் போல செய்திருக்கிறார். ஆனால் அரசியலில் ஒரு பெண் எந்த வகையில் வருத்தப்பட்டாலும், அது என்னை வருத்தமடையச் செய்யும். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தியிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. ஒரு பெண் என்கிற முறையில் வரும் காலத்தில் அவருக்கு தேவைப்படும் ஆதரவை தருவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.
ஏனென்றால் அரசியலில் ஒரு பெண் மேலே வருவது என்பது மிக சிரமமான காரியம். ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த ஆறு மாத காலமாகவே சந்திர பிரியங்காவின் துறையில் ஒரு அதிருப்தி நிலவியது. முதலமைச்சரே அதை கூறும்போது, துணை நிலை ஆளுநரான என்னால் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. ஆறு மாதங்களுக்கு முன்பாகவே இப்படி ஒரு சூழல் வந்தது. அப்போதே ஒரு பெண் என்ற முறையில் சந்திர பிரியங்காவை பாதுகாப்பதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டேன். அனைத்து நேரங்களிலும் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதைகள் கொடுக்கப்பட்டது என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியும்” என்றார்.
அமைச்சர் பதவியில் இருந்து தன்னை நீக்கும் நடவடிக்கையை அறிந்து தான் தனது பதவியை ராஜினாமா செய்தார் சந்திர பிரியங்கா என்ற ஆளுநர் தமிழிசையில் கருத்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
