அல்லது அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டதா என்பது மர்மமாகவே உள்ளது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். சந்திர பிரியங்கா அமைச்சரவை மீது பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்துள்ளார். `நான் சாதியரீதியாகவும், பாலினரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளேன். ஆண் வர்க்கம் என்னை செயல்படவிடாமல் தடுக்கிறது. ஆணாதிக்கத்தை எதிர்த்து என்னால் செயல்பட முடியவில்லை” என்று மன உளைச்சலுடன் தன்னுடைய கடிதத்தில் எழுதியிருக்கிறார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் இதுபோன்ற கடிதத்துக்கு, புதுச்சேரி அரசில் இருந்து யாரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
இதில் முதல்வர் ரங்கசாமிதான் முதல் குற்றவாளி. மத்திய பட்டியலின சமுதாயத்தின் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் நடைபெறும் ஊழல் பகிரங்கமாக வெளியே வருகிறது. மத்திய அரசிடம் இருந்து ரூ.2,650 கடன் வாங்கி அதை வைத்து சாலைகள், வாய்க்கால் கட்டும் திட்டங்களை செய்து வருகின்றனர். அதில் 30 சதவிகித கமிஷன் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை பங்கு போட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த பகிரங்க ஊழலை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். இந்த ஆட்சியில் ஊழலைத் தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com