கடலில் மிதந்து வந்த பெண்ணின் தலை… அதிர்ந்த மீனவர்களுக்கு

புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து, இன்று காலை வழக்கம்போல மீன் பிடிக்க, மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அப்போது முகத்துவாரமும், கடலும் சந்திக்கும் இடத்தில் இன்று காலை பெண்ணின் மண்டை ஓடு ஒன்று கடல் நீரில் மிதந்து வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அது குறித்து கடலோரக் காவல் படை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதற்குள் பெண்ணை யாரோ கொலைசெய்து, கடலில் வீசிவிட்டதாக அந்தப் பகுதியில் தகவல் பரவியதால், அங்கு கூட்டம் கூடியது. அதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கடலில் மிதந்து வந்த காட்சி பொம்மைகடலில் மிதந்து வந்த காட்சி பொம்மை

கடலில் மிதந்து வந்த காட்சி பொம்மை

அப்போது அங்கு வந்த கடலோரக் காவல்படை போலீஸார், மீனவர்களுடன் படகில் சென்று கடலில் மிதந்து வந்த தலையைக் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். அதற்குள் உள்ளூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போதுதான் துணிக்கடைகளில் வைக்கப்படும் பொம்மை (Mannequin) என்று தெரியவந்தது. கடல் நீரில் ஊறியதால், அந்த பொம்மையின் நிறம் மாறி, பெண்ணின் சடலம் போலவே மாறிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *