புதுச்சேரி: `தனியார் தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தவர்

அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு உயிர்களைக் கொன்று இருப்பது மட்டுமல்லாமல், 50-க்கும் மேற்பட்ட நபர்களை தீக்காயம் அடைய வைத்திருக்கிறது.  தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது இன்னும் ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.  மனித இழப்பு மற்றும் காயமடைந்த நபர்களைப் பற்றி,  அரசாங்கமோ நிர்வாகமோ  கவலைப்படவில்லை.  புகார் அளித்தும் யாரும் கைது செய்யப்படவில்லை. வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.  காலாப்பட்டு இன்ஸ்பெக்டரும், அதிகாரிகளும் மௌனப் பார்வையாளராக, சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளின் ஆலோசனையின்படி செயல்படுகிறார்கள். அந்த இன்ஸ்பெக்டர் என்ன நடவடிக்கைகள் எடுத்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி,  அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த யுவராஜ் என்ற ஊழியர் குழந்தை தொழிலாளி. அவருடைய பிறந்த தேதி 10-12-2006.  உயிரிழந்த அன்று அவர்  16 வயது, 11 மாதம், 7 நாட்களை நிறைவு செய்தார்.  ஒரு வருடத்திற்கு முன்பு 15 வயதில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

குழந்தை தொழிலாளர் சட்டம் 1986 இன் கீழ் 18 வயதுக்கு குறைவானவர்கள் குழந்தை தொழிலாளர்களாக எடுத்துகொள்ளப்படுவார்கள். நிலக்கரி சுரங்கம், உலோக தொழிற்சாலை, மருந்து தொழிற்சாலைகள் உள்ளிட்ட 65 தொழிற்சாலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பணியில் அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் சட்டம் 1986, பிரிவி 3 மற்றும் 3A-ன் படி  அந்த தொழிற்சாலை உரிமையாளர் மீது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். SOLARA  ஆக்டிவ் பார்மா சயின்ஸ் லிமிடெட்., தொழிற்சாலை   அபாயகரமான  இரசாயனத் தொழிற்சாலை என்பதால், 16 வயது சிறுவன் எப்படி  நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டார் என்பது தெரியவில்லை. எனவே இதுதொடர்பாக  தொழிற்சாலை நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *