அசத்தும் தமிழக அரசு…! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5,000 பரிசுத்தொகை…! எதற்காக தெரியுமா…?

அசத்தும் தமிழக அரசு…! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5,000 பரிசுத்தொகை…! எதற்காக தெரியுமா…?

காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் வெற்றிபெற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி 30.10.2023 (திங்கள் கிழமை) அன்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி 15.11.2023 (புதன் கிழமை) அன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியே பேச்சுப் போட்டிகள் காஞ்சிபுரம், டாக்டர் பி.எஸ்.எஸ். நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இப்போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு முற்பகல் 09.00 மணிக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 02.00 மணிக்கும் தொடங்கப்பட உள்ளன.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் கல்லூரிக்கு 2 பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வரே தெரிவுசெய்தும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பள்ளிகளின் தலைமையாசிரியர்களே ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம் தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ / மாணவியருக்கும், கல்லூரி மாணவ மாணவியருக்கும் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் பேச தயாராக வர வேண்டும். போட்டி நடைபெறும் நாளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் தலைப்பை பற்றி பேச வேண்டும்.

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ2000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. இதேபோன்று பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசுத் தொகை ரூ.2000/ வீதம் வழங்கப் பெறவும் உள்ளன. இதில் கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *