ஃபிரெஷ்ஷர்களை வேலைக்கு எடுக்க தயக்கம் காட்டும் முன்னணி நிறுவனங்கள்.. வேலைவாய்ப்பு 30% குறைய வாய்ப்பு..

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான முன்னணி ஐடி நிறுவனங்கள் ஃபிரெஷ்ஷர்களை பணிக்கு சேர்த்துக் கொள்கின்றன. ஃபிரஷ்ஷர்களுக்கென்றே ஒரு சில வேலைவாய்ப்புகள் உள்ளன. இதில் இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட மிகப் பெரிய ஐடி நிறுவனங்கள் இந்த ஆண்டு ஃபிரெஷ் கிராஜூவேட்களை வேலைக்கு எடுப்பதில் கொஞ்சம் தயக்கம் காட்டுகின்றன.

ஏற்கனவே கேம்பஸ் ஹையரிங் மற்றும் ஆஃபர் லெட்டர்களை வழங்கிய பட்டதாரிகளை எப்போது பணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், உலகம் முழுவதிலும் ஐ.டி நிறுவனங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, வணிகம் கொஞ்சம் சரிந்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு வேலைக்கு தேர்வு செய்யப்படும் ஃபிரஷ்ஷர்களை எண்ணிக்கையில் 30 சதவீதம் வரை குறையலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார பாதிப்பும் நெருக்கடியும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. டீம்லீஸ் டிஜிட்டல் என்ற ஸ்டாஃப்பிங் ஏஜன்சி இதை பற்றிய கணிப்பை வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2022 அக்டோபர் வரையில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அப்போது கணிசமான எண்ணிக்கையில் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்கின. ஆனால், அதற்கு எதிர்மாறாக இந்த நிதியாண்டு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல ஏற்கனவே 2022 மட்டும் 2023 ல் தேர்ச்சி பெற்ற இன்ஜினியரிங் பட்டதாரிகள், ஐடி சேவை நிறுவனங்களில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு கூட இன்னும் ஆன்போர்டிங் செய்யப்படாமல் உள்ளனர். ஒரு சிலருக்கு எப்பொழுது பணிக்குச் செல்லலாம் என்ற ஜாயினிங் தேதி இன்னும் உறுதியாக கூறப்படவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் பட்டதாரிகள் இந்த பட்டியலில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிலருக்கு அடுத்தடுத்து பணியில் சேரும் தேதிகள் மாற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், ஒரு சிலர் கூடுதலாக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். துரதிஷ்டவசமாக சில பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு நியமனங்கள் ரத்து செய்யப்பட்டன. பிசினஸ் டுடே வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இளம் பட்டதாரிகள் தற்பொழுது தங்களுடைய வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்று சரியாக கணிக்க முடியாத ஒரு நிலையில் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

NITES இன் பிரஸிடெண்ட் ஆன ஹர்ப்ரீத் சிங் சலூஜா, கிட்டத்தட்ட 20,000 – 25,000 வரையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பட்டதாரியான மாணவர்கள் பணியில் சேர்வதில் தொடர்ந்து தாமதத்தை எதிர்கொண்டு வந்துள்ளனர். இதுவும், தற்போதைய வணிக சூழலும் இந்த ஆண்டு புதிய வேலைவாய்ப்பிற்கு சாதகமான சூழல் இல்லை என்று கூறியுள்ளார்.

Also Read : தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பமா? வரி விதிப்பு முறைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..

மிடில்-லெவல் பணிகளை, வேலைவாய்ப்புகளைக் குறைத்து புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது நிறுவனங்களுக்கு பெரிய அளவில் சாதகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறி இருக்கிறார்கள். அதேபோல பெரிதாக பலன் இல்லாத, அதிகமாக சம்பளம் வாங்கும் நிறுவனத்தின் மூத்த ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யவேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

அலுவலகத்தில் முக்கியமான பணிகளை மேற்கொள்பவர்களுக்கு தேவையானவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வை அளிக்கவேண்டும்; இதன்மூலம் செலவுகளை கட்டுப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர். எல்லா நிறுவனங்களிலும் இதுபோன்ற சவால்கள் தோன்றுவதால் ஃபிரஷ்ஷர்களை வேலைக்கு எடுப்பதில் தயக்கம் காட்டக்கூடாது, அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதில் நிறுவனங்களின் பங்கு முக்கியமானது என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.news18.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *