`பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்’- தமிழகத்தின் 7 மாவட்டங்களில்

கைவினை கலைஞர்கள் மற்றும் கைகளால் தங்கள் பொருளை தயாரிக்கும் தொழிலாளிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் விஸ்வகர்மா. இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பயிற்சி மற்றும் உதவித்தொகை வழகப்படும். மேலும் அவர் தங்கள் பொருள்களை சந்தைப்படுத்தவும், பிராண்டிங் மற்றும் இ-காமர்ஸ் போன்ற நடவடிக்கைகளுக்கும் அரசு தரப்பில் ஆதரவு அளிக்கப்படும்.

கைவினை

இந்நிலையில் இந்த விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் பலன் பெற தமிழகத்தை சேர்ந்த 9,246 பயனாளிகள் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 17.10.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3676 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1025 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1506 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 896 பேரும் பதிவு செய்துள்ளனர். இதேபோல், நீலகரி மாவட்டத்தில் 187 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 895பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 1061 பேரும் பதிவு செய்துள்ளனர்.

இத்திட்டத்தில் பயனடைய தேர்வு செய்யப்படுவதற்கு மூன்றடுக்கு சரிபார்ப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். மூன்று கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு பின்னர் இத்திட்டத்தில் பயனடைவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *