“கட்சி ஆரம்பித்த போது கடவுளுடனும், மக்களுடனும்தான் கூட்டணி என்றார், விஜயகாந்த். அந்த கொள்கையை பின்பற்றியவரை தே.மு.தி.க வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால் 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகுதான் விஜயகாந்துக்கான சரிவு ஆரம்பித்தது. தே.மு.தி.க எதற்காக தொடங்கப்பட்டதோ, அந்த தனி தன்மையை இழந்துவிட்டது. விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் கட்சியை தூக்கி நிறுத்தி இருப்பார். விஜயகாந்துக்கு கொடுத்த ஆதரவை பிரேமலதாவுக்கு மக்கள் கொடுக்க மாட்டார்கள். இழந்த செல்வாக்கை மீட்க முடியாது என்பதால் பத்தோடு பதினொன்றாக கட்சியை நடத்தலாம்” என்றார்.
“கடந்த சில காலமாக கட்சி பணிகள் அனைத்தையும் பிரேமலதா தான் கவனித்து வருகிறார். அதனால் பிரேமலதாவுக்கு இந்த புதிய பதவி என்பது பெரிய மாற்றத்தை கொண்டு வராது. முன்னர் விஜயகாந்த் பெயரில் வெளியான அறிக்கைகளில் இனி பிரேமலதா பெயரும் இடம் பெறும். மற்றப்படி கூட்டணி விவகாரங்கள், கட்சி விவகாரங்களில் வழக்கம் போல் பிரேமலதா தான் செயல்படுவார்.” என்கிறார் அரசியல் நிபுணர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
