“என்ன காப்பாத்துங்க”; உடலில் தீ எரிந்தபடி, சாலையில் ஓடி வந்த கர்ப்பிணி பெண்.. போதையில், கணவன் செய்த கொடூரம்..

“என்ன காப்பாத்துங்க”; உடலில் தீ எரிந்தபடி, சாலையில் ஓடி வந்த கர்ப்பிணி பெண்.. போதையில், கணவன் செய்த கொடூரம்..

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கோவிந்தாபுரம், வண்டி பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 28 வயதான ராஜ்குமார். மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் இவருக்கு, 25 வயதான நந்தினி என்ற மனைவியும், 6 வயதான ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி நந்தினி, தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று மதியம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ராஜ்குமார், தனது மனைவிஇடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

வாக்குவாதத்தின் போது, ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் தனது மனைவியை சரமாரியாக தாக்கியா தோடு, மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு வெளியே ஓடியுள்ளார். இதில், கர்ப்பிணியான நந்தினி, உடலில் தீ எரிந்த நிலையில் அலறி அடித்துக் கொண்டு தெருவுக்கு ஓடி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர், அவரது உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ வேகமாக பரவியதால் அவரது உடல் முழுவதும் எரிந்து விட்டது..

பின்னர், பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நந்தினியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், ராஜ்குமாரை கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்தனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *