‘அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயல்’ என்று விமர்சித்திருக்கிறார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘பொதுப் பயன்பாட்டுக்கான புதிய மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து மீண்டும் பழைய நடைமுறையைக் கொண்டுவர வேண்டும்.
மின் கட்டணத்தை உயர்த்தும்போது பன்மடங்கு உயர்த்திவிட்டு, குறைக்கும்போது சொற்ப அளவிலேயே குறைப்பது சரியா என்ற கேள்வியை தமிழ்நாடு அரசை நோக்கி அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் எழுப்புகிறார்கள். எனவே, புதிய மின் கட்டண முறையை முழுமையாக ரத்து செய்துவிட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு முன்பு இருந்த நடைமுறையைக் கொண்டுவர வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.


2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுப்பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தைக் கண்டு அதிர்ந்துபோன தமிழக மக்களுக்கு, முதல்வர் ஸ்டாலினின் தற்போதைய அறிவிப்பு ஓரளவு ஆதரவைத் தரலாம். ஒரு யூனிட் ரூ.8 என்பதை ரத்துசெய்ய வேண்டும் அல்லது வெகுவாகக் குறைக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில், ரூ.5.50 என்று கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதற்கு முழுமையான வரவேற்பு கிடைக்கவில்லை. கட்டணத்தை இன்னும் குறைத்திருக்கலாம் என்றே மக்கள் கருதுகிறார்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com