`போடாத சாலை… போடப்பட்டதாக தகவல் பலகை!' – திருவாரூர்

தகவல் ஆணையம் தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் மனுவில், எங்களது ஊராட்சியில், சாலை போடப்பட்டதாக பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது எங்களது ஊராட்சியில் பல பகுதிகளில் தார் சாலை அமைத்ததாக பொய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும் 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் எங்கள் ஊராட்சிக்கு விளையாட்டு மைதானம் அமைத்ததாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதுவரை எங்களது கிராமத்தில் விளையாட்டு மைதானம் என்ற ஒன்றே கிடையாது. கிட்டத்தட்ட முறைகேடாக 39 லட்சம் ரூபாய் வரை அரசாங்கத்தினுடைய நிதி பணம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவராலும், கிராம அரசு அதிகாரிகள் மூலமாகவும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவே “சாலையை காணவில்லை” என்று போஸ்டர் அடித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து பகுதிகளிலும் எங்களது கிராம மக்கள் சார்பாக ஒட்டி உள்ளோம்.

போடப்படாத சாலைபோடப்படாத சாலை

போடப்படாத சாலை

இந்த போஸ்டர் ஒட்டியதற்காக காவல் துறையை வைத்தும், அரசு உயர் அதிகாரிகளை வைத்தும் என்னை மிரட்டுகிற வகையிலும் பேசி வருகின்றனர். அகரதிருமளம் ஊராட்சி பொதுத் தொகுதியாக இருந்த  போது, கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக வின் ஊராட்சி மன்ற தலைவராக ராஜசேகரன் என்பவர் இருந்தார். ஆனால் இப்போது (தனி)ஊராட்சி ஆனதால், பால்வண்ணன் என்கிற பட்டியல் சமூகத்தை சேர்ந்த நபரை  ஊராட்சி மன்ற  தலைவராக வெற்றி பெற வைத்த விட்டு, அவருக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் கொடுத்து வருகிறார். மேலும், எங்களது கிராமத்தில் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கிற சாலை வசதி, சுடுகாடு வசதி, கழிப்பறை வசதி, மின்விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாக செய்து தரப்பட வேண்டும். மேலும் அரசின் பொது நிதியிலிருந்து பணத்தை முறைகேடு செய்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்களின் மீதும், அதற்கு துணை போன அரசு அதிகாரிகள் மீதும் உடனடியாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் எங்களது அகர திருமாளம் கிராம மக்கள் சார்பாக சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார்.

போடப்படாத சாலைபோடப்படாத சாலை

போடப்படாத சாலை

இந்த பிரச்சனை தொடர்பாக அகர திருமாளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகரன் அவர்களிடம் பேசிய போது… “சாலை போடுவதற்கான அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சாலை போடுவதற்கான மூலப்பொருட்களான  தார், ஜெல்லி கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது . கூடிய விரைவில் சாலை போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் பொது நிதியில் இருந்து  பணம்  எடுத்து ஊழல்  நடந்திருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இப்போது உள்ள  காலகட்டத்தில் அரசாங்கத்தினுடைய நிதியை அவ்வளவு எளிதில் யாரும் எடுத்து விட முடியாது” என முடித்துக்கொண்டார்!

இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அம்மக்களின் கோரிக்கை!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *