மேலும், “லியோ திரைப்பட ட்ரெய்லர் வெளியிட்டபோது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டதற்கும் , ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு உள்ளிட்ட குளறுபடிகள் ஏற்பட்டதற்கும் காவல்துறையினரின் தவறான கையாளுதலே காரணம்” என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். பின்னர், இது குறித்து ஆஜராகி விளக்கமளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “லியோ ட்ரெய்லரை ரோகிணி திரையரங்குக்கு வெளியில் திரையிடுவது தொடர்பாக அனுமதி கோரி, எந்த விண்ணப்பமும் அளிக்கப்படவில்லை. அனுமதி கோரியிருந்தால் பரிசீலிக்கப்பட்டிருக்கும். ரோகிணி திரையரங்கம்


திரையரங்குக்கு உள்ளே லியோ ட்ரெய்லர் திரையிட எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை. மேலும், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது போலி டிக்கெட்கள் மூலமாக ரசிகர்கள் குவிந்துவிடாமல் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியதால், அந்த நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்களே ரத்து செய்துவிட்டனர். அதற்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தற்போது அனுமதி கோரினால், பரிசீலிக்கத் தயார். திரையரங்கில் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை, புகார் இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் விஜய் ரசிகர்களுக்கு எதிராகச் செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். காவல்துறையைப் பொறுத்தவரை எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுப்பதில்லை” எனத் தெரிவித்தார். அதற்கு நீதிபதி, “சட்டம் – ஒழுங்கு பிரச்னையை பற்றித்தான் நீதிமன்றம் கவலை தெரிவித்தது. பத்திரிகையில் செய்தி வெளியானதால், இது குறித்து கேள்வி எழுப்பினேன்” எனக் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com