சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பனையூர் பண்ணைவீட்டில், அதிக சத்தத்துடன் பார்ட்டி நடப்பதாக, நவம்பர் 5ஆம் தேதி தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜூக்கு புகார் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, தாம்பரம் ஆணையர் கொடுத்த உத்தரவின்பேரில், பனையூரில் உள்ள சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், அங்கு பார்ட்டி நடப்பதை உறுதி செய்தனர். பின், காவல் துறையினரை கண்டதும் அங்கு மதுபோதையில் அரைகுறை ஆடைகளுடன் ஆடிக்கொண்டிருந்த பெண்கள் ஓடி ஒளிந்துகொண்டனர். தொடர்ந்து, அங்கிருந்த 15 ஆண்களையும் 8 பெண்களையும் சுற்றி வளைத்தது, காவல் துறை. அப்போது காவல்துறையினரின் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, ஈசிஆர் பண்ணை வீட்டை நவம்பர் 4,5 (சனி மற்றும் ஞாயிறு) இரண்டு நாட்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர், கோவையைச் சார்ந்த செந்தில் குமார் – ஜெயலட்சுமி தம்பதியினர். பின், சனிக்கிழமை கணவன் – மனைவி எனக்கூறிக்கொண்டு 8 போலி தம்பதிகளும், அவர்களுடன் வயதான சிங்கிள்ஸ் பத்து பேரும் வந்துள்ளனர். பின், அதிக சத்தத்துடன் ஒலி, நடனம்புரியவைக்கும் லைட் செட் அப், மது, கஞ்சா, போதை மாத்திரை என போய் பார்ட்டி களைகட்டியுள்ளது. இந்த பார்ட்டியை 2018ஆம் ஆண்டு முதல் கோவை தம்பதியினர் ஃபேஸ்புக்கில் பக்கம் ஆரம்பித்து ஏற்பாடு செய்து, பணம் சம்பாதித்து வந்துள்ளனர். குறிப்பாக, ஃபேஸ்புக்கில் Real Married Swap and Party couples என்னும் பெயரில் செய்துவருகின்றனர்.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
