ஒரே சமூகத்தைச் சேர்ந்த இளம் காதல் ஜோடிகள் வீட்டை எதிர்த்து திருமணம் செய்ததை தொடர்ந்து, கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சாணார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். பட்டதாரியான இவர், பாலக்கோடு பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அதே பகுதியில், மளிகை கடை நடத்தி வரும் மணி என்பவரின் மகள் நர்மதா., இவர் நர்சிங் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், சீனிவாசனும், நர்மதாவும் ஒருவரை, ஒருவர் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர்.
இவர்களுடைய காதல் விவகாரம் நர்மதாவின் வீட்டிற்கு தெரிய வந்ததால், இந்த காதலுக்கு, பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதோடு, நர்மதாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். ஆகவே நர்மதா, இது பற்றி சீனிவாசனிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர் இருவரும், கடந்த 20 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம், பழனி, முருகன் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்த நர்மதாவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் சீனிவாசனின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே இன்று காதல் ஜோடி இருவரும், தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். ஒரே சமூகத்தைச் சார்ந்த காதல் ஜோடியை பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ளாமல், கொலை மிரட்டல் விடுத்ததாக தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடியால், உறவினர்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக வழங்க பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நன்றி
Publisher: 1newsnation.com