ஒரு மனிதனின் வாழ்கையில் மிக முக்கியமான பகுதி என்றால் அது அவர்களின் திருமண வாழ்க்கை தான். மனிதனை மிருகமாக்குவதும், மிருகம் போன்ற குணம் உடையவர்களை மனிதனாக்குவதும் திருமண வாழ்க்கை தான். ஒருவருக்கு என்ன வசதி வாய்புகள் இருந்தாலும் அவர்களின் சந்தோசம் தங்களின் வாழ்க்கை துணையை பொறுத்தே அமையும். அந்த வகையில், திருமண வாழ்கையில் பிரச்னை வந்துவிட்டால் வாழ்க்கை முழுவது நரகமாகிவிடும். அப்படி திருமண வாழ்கையில் பல பிரச்சனைகளை மேற்கொள்ளும் இந்த 5 ராசிக்காரகள் என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்: தலைமைப் பண்பு கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு, அடிக்கடி கோவம் வரும். அனைத்திலும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என இவர்கள் நினைப்பதால், இவர்களின் துணை சிறு தவறு செய்தால் கூட அதிக கோபம் வந்துவிடும். ஆனால் பேசுவதை எல்லாம் பேசிவிட்டு, பின்னர் தங்களின் தவறு உணர்ந்து மன்னிப்புக்கேட்பார்கள். இதை அவரது துணை புரிந்து கொண்டால் வாழ்க்கை சுமுகமாக இருக்கும். இல்லையென்றால், மேஷ ராசியினர் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
மிதுனம்: வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடன் வாழ்வது இவர்களுக்கு கடினமான ஒன்று. வாழ்க்கையினை சந்தோஷமாக பார்க்க வேண்டும் என்று நினைக்கும் இவர்களின் வாழ்க்கை துணை, அவர்களை கட்டுப்படுத்த நினைத்தால் அவர்கள் வாழ்கையில் தினமும் சண்டை தான்.
கன்னி: இந்த ராசிக்காரர்கள் அநேகருக்கு திருமண வாழ்க்கை சண்டையாக தான் இருக்கும். எந்த விஷயத்தையும் எடுத்து எறிந்து பேசுவதால், இந்த ராசிக்காரர்கள் சிலருக்கு மணமுறிவு கூட நிகழலாம். இதனால், திருமணம் ஆன உடன் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
விருச்சிகம்: வெளியில் பார்ப்பதற்கு கரடு முரடானவர்கள் போல் தெரியும் விருச்சிக ராசிக்காரர்கள், உண்மையில் குழந்தை உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் பார்ப்பதற்கு கரடு முரடானவர்கள் போல் தெரிவதால் இவர்கள் நிறைய காயங்களைச் சந்திக்க நேரிடும். அது மட்டும் இல்லாமல், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதால் பலர் சிக்கலை சந்திப்பர். இதனால் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் வாழ்க்கை சுமுகமாக இருக்கும்.
மகரம்: தனது தொழிலில் அதிக கவனம் செலுத்தும் இவர்கள், தனது துணையை திருப்திப்படுத்தமாட்டார்கள். அதனால் இந்த பழக்கத்தை மாற்றினால் மட்டுமே போதும்..
நன்றி
Publisher: 1newsnation.com