இந்த ராசிக்காரர்கள் பெருமாளை வணங்கினால், கட்டாயம் அதிர்ஷ்டம் உண்டு..

இந்த ராசிக்காரர்கள் பெருமாளை வணங்கினால், கட்டாயம் அதிர்ஷ்டம் உண்டு..

கடக ராசி: ராசிகளில் நான்காம் ராசி கடகராசி. கடகராசிக்கு அதிபதி சந்திரன். கடகராசியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கட்டாயம் பெருமாளின் அருளாசி உண்டு. அதிக சுறுசுறுப்புடன் பணி செய்யும் கடக ராசியினர், எல்லா விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து பிறகு தான் செய்வார்கள். தலைமைப் பதவிக்கு தகுதியான இவர்களுக்கு சகிப்புத் தன்மை அதிகம் உண்டு. உதவும் எண்ணம் கொண்ட இவர்களால், யாருக்கும் பிரச்சனை இருக்காது. பெருமாளின் அம்சம் கொண்ட கடக ராசியினர், வாதம் என்று வந்துவிட்டால் பிடிவாதமாக இருப்பார்கள். ராமர் கடக ராசியில் புனர் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷப ராசி: வசீகரிக்கும் தோற்றம்கொண்ட ரிஷப ராசியினர், பேச்சிலும் கெட்டிக்காரர்கள். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செய்யும் இந்த ராசியினருக்கு, பிசினஸில் அதிக ஆர்வமுடன் இருப்பார்கள். மகாபாரதத்தில் கிருஷ்ணர் ரிஷப ராசி, ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னி ராசி: பெருமாளின் அம்சம் கொண்ட கன்னி ராசியினர், யாரையும் புண்படுத்தாமல், தவறு செய்பவர்களைக் கூட அன்பால் திருத்துவார்கள். மேலும், இவர்கள் பன்முக துறையில் பணியாற்றி வெற்றிகாண்பார்கள். பெருமாளின் அவதாரமான பரசுராமன் அவதாரத்தில், பரசுராமன் கன்னி ராசியில் பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேல் உள்ள மூன்று ராசிகளிலும், பெருமாள் அவதாரம் எடுத்திருப்பதால், இவை பெருமாளுக்கு உகந்த ராசிகள். அதனால், இவர்கள் பெருமாளை நினைத்து வணங்கினால் அவர்கள் நினைத்த அனைத்தும் கைகூடும்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *