இதற்கு பதிலளித்துள்ள சரத் பவார்,” எங்களது காலத்தில் அதிருப்திக்கு இடமில்லை. நாங்கள் அமர்ந்து பேசி முடிவு செய்வோம். நானும் கட்சியில் இருந்து வெளியில் வந்தது கட்சியை உடைத்துக்கொண்டு வந்ததாக அர்த்தம் அல்ல. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வெளியில் வந்தேன். அதற்காக யாரும் புகார் செய்யவில்லை” என்றார். சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மகாவிகாஷ் அகாடி கூட்டணிக்கு மக்களவை தேர்தலில் அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்து சரத்பவார் கூறுகையில்,”கருத்துக்கணிப்புகள் ஒரு அறிகுறிதான். அது இறுதியானது என்ற முடிவுக்கு யாரும் வந்துவிடவேண்டாம். பிரகாஷ் அம்பேத்கர் கட்சி 48 தொகுதியிலும் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சொந்தமாக முடிவு எடுக்க அதிகாரம் இருக்கிறது. அவர் இந்தியா கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
