இதற்கான அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிடும் போது இன்னும் நான்கு நாள்களில் சரி செய்திடுவோம், ஆட்கள் பற்றாக்குறை மற்றும் மழைக்காலம் என பல காரணங்களைக் கூறிக்கொண்டு சரியான நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இங்கு தேங்கியிருக்கும் கழிவு நீரில் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள். முதியோர்கள் என பலருக்கும் நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சாக்கடை தேங்கி நிற்கும் தெருவில்தான் அங்குள்ள குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என பலரும் சாலையைக் கடந்து செல்கின்றனர். அரசாங்கம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி கே.வி தங்கபாலுவின் வீட்டிற்கு முன் இவை நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com