மக்களே உஷார்..! தமிழகத்தின் இந்த மாவட்டத்தில் தான் காற்று மாசு அதிகம்..! இதே போல் போனால் 2030-ல் 27 விழுக்காடு அதிகரிக்கும்..!

மக்களே உஷார்..! தமிழகத்தின் இந்த மாவட்டத்தில் தான் காற்று மாசு அதிகம்..! இதே போல் போனால் 2030-ல் 27 விழுக்காடு அதிகரிக்கும்..!

2030 ஆம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 விழுக்காடு அதிகரிக்க வாய்ப்பு என பெங்களூரு ஆய்வு மையம் தகவல்.

பெங்களுருவில் உள்ள அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையம் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டில் சென்னை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டடங்களில் வெளியேற்றப்பட்ட மாசு தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் தூத்துக்குடியில் அனல் மின் நிலையங்கள், கனரக தொழிற்சாலைகள் இருப்பதால் காற்று மாசு அதிகாமாக இருப்பதாகவும், தூத்துக்குடியை காட்டிலும் சென்னையில் இரு மடங்கு அதிகமாக காற்று மாசு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த காற்று மாசுவை குறைக்கவிட்டால் 2030 ஆம் ஆண்டில் சென்னை திருச்சியில் அதிகபட்சமாக 27 விழுக்காடுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் 20 விழுக்காடும், தூத்துக்குடியில் 16 விழுக்காடும் மாசு அதிகரிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்தில் வெளியாகும் மாசுவை குறைக்க கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் காற்று மாசுவை குறைக்கலாம் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *