மக்களே உஷாரா இருங்க… இத்தன மாவட்டத்துல இன்னைக்கு மழை அடிச்சி ஊத்தப்போகுதாம்..! வானிலை மையத்தின் தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கோடை வெயில் முடிந்த பின் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் பலரும் வெளியில் வர முடியாமல் சிரமப்பட்டனர். அதன்பின், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. ஆனால், அப்பொழுது கூட இந்த வெயிலின் தாக்கம் குறைந்த பாடில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

People be careful Its going to rain today in the district Information from Meteorological Center see here

இந்த சூழ்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது பொதுமக்களுக்கு இனிப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அக் 8 (இன்று) தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Also Read : தீபாவளி பண்டிகைக்கு நீங்களும் சொந்த ஊருக்கு போறீங்களா..? அப்போ இந்த வாய்பை மிஸ் பண்ணிடாதிங்க…

தமிழக பகுதிகளாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை(திங்கட்கிழமை) முதல் நாளை மறுநாள்(புதன்கிழமை) வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *