இந்திய நாடாளுமன்றத்தில், 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி தீவிரவாத தாக்குதல் நடந்திருந்த நிலையில், தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு டிசம்பர் 13-ம் (கடந்த புதன் கிழமை) தேதியில், மக்களவைக்குப் பார்வையாளர்களாக வந்திருந்த இருவர் திடீரென அவைக்குள் குதித்து மஞ்சள் நிற புகையைப் பரப்பிய சம்பவம், பெரும் பரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, போலீஸ் அதிகாரிகள் ஆறு பேரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


இன்னொருபக்கம், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த விவகாரத்தில் அறிக்கை வெளியிட வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இருப்பினும், மோடியும், அமித் ஷாவும் இதுவரை இந்த விஷயத்தில் வாய் திறக்கவில்லை. மாறாக, பா.ஜ.க அரசு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி எம்.பி-க்களில், 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நன்றி
Publisher: www.vikatan.com