
தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் ஒன்றோடொன்று போட்டி போட்டு கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை கவர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக புதிது புதிதாக பல்வேறு சீரியல்கள் மற்றும் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் புதுப்புது ட்டுவிஸ்ட்கள் என மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில், லட்சகணக்கான மக்களின் விருப்பத்தை பெற்ற ஒரு சீரியல் தான் விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாகவும், அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையையும் காட்டுவதால் பலருக்கும் இந்த சீரியல் favorite ஆக மாறியுள்ளது. இந்நிலையில், தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வார கதையில், ஜனார்த்தனை கொலை செய்ய பார்த்தது ஜீவா, கதிர்தான் என்று பிரசாந்த் சொன்னதால் இவர்கள் இருவரும் ஜெயிலில் உள்ளனர். இதில், எதிர்பாராத விதமாக பலத்த காயத்துடன் அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் ஜனார்த்தனனுக்கு திடீரென்று சுய நினைவு திரும்ப அவர் நடந்ததிற்கெல்லாம் காரணம் பிரசாந்த் தான் என்ற உண்மையை சொல்கிறார்.
ஜனார்த்தனன் கூறியதை தொடர்ந்து, கதிரும், ஜீவாவும் ஜெயிலில் இருந்து வெளியே வருகின்றனர். இதனால், குடும்பம் ஒன்று சேருகிறது. இந்நிலையில், சற்றுமுன் வெளியான தகவலின்படி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இத்துடன் முடிய போவதாக கூறப்படுகிறது. என்னது இந்த சீரியல் முடிய போதா? என்று கவலைப்படாதிங்க… பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஸ்டார்ட் பண்ண போறாங்களாம்.
அதன்படி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வது சீசனில், தனத்தின் குழந்தையான பாண்டியன் பெரிய பையனாக வளர்ந்தும், கதிர், ஜீவா மற்றும் கண்ணனின் குழந்தைகள் அக்கா தங்கையாக இருக்க, அண்ணன் சகோதரிகளின் பாசத்துடன் கதை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த 2 வது சீசனில் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
நன்றி
Publisher: jobstamil.in