இது குறித்துப் பேசும் எதிர்க்கட்சிகள், “ஆளும் பா.ஜ.க அரசின் இந்த திடீர் நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியில், அரசு மீது சிஏஜி முன்வைத்த பல லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், விலைவாசி உயர்வு எனப் பல்வேறு பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளும் யுக்தி இருக்கிறது. நாட்டின் வளர்ச்சி என்ன என்ற கேள்வியை பின்னுக்குத் தள்ளி, தேசியம் என்ற அரசியல் விவாதத்தைத் தேர்தலை நோக்கி பா.ஜ.க முன்னெடுக்கிறது” எனக் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கிடையில், இந்தியா என்ற பெயர் சிந்து நதியினாலேயே(INDUS) வந்தது. இந்தியா என்ற பெயருக்கு பாகிஸ்தானும் தகுதியானவர்கள். எனவே இந்தியா தனது பெயரைப் பாரதம் என அறிவித்துக்கொண்டால், பாகிஸ்தானின் பெயரை இந்தியா என மாற்றிக்கொள்ள ஐ.நா-வில் உரிமை கோர பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானின் சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதிகாரப்பூர்வமாக அதிகாரிகள் யாரும் இது குறித்து பேசவில்லை.
நன்றி
Publisher: www.vikatan.com
