மனைவியை நிர்வாணமாக்கி கணவனே கிராமத்தினர் முன்னிலையில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்நகரில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண், வேறு ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது அந்த கிராம மக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவரது மாமியாரின் கிராமத்திற்கு கடத்தி வரப்பட்ட அந்த இளம்பெண், தனது கணவனால் ஊரார் முன்னிலையில் நிர்வாணமாக்கப்படுகிறார்.
அந்த இளம்பெண் கதறி அழுதும் கூட அவரை விடாமல், உடைகளை கணவனே அவிழ்த்து, நிர்வாணமாக்கி கிராம மக்கள் முன்னிலையில் ஊர்வலமாக நடந்து வரச் செய்துள்ளார். இதை உறவினர்கள் பார்வையாளர்களாக அமைதியாக பார்த்துக் கொண்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது சமூக வலைதள பக்கத்தில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை. அவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.
நன்றி
Publisher: 1newsnation.com