தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்படுகிறது..? சூசகமாக சொன்ன அமைச்சர்..!! மதுப்பிரியர்கள் ஷாக்..!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மதியம் 2 முதல் இரவு 8 மணி வரை என்ற அளவில் குறைக்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ”பொதுமக்கள் நலன் கருதி மதுவுக்கு அடிமையானவர்களை தடுக்க, டாஸ்மாக் விற்பனை நேரத்தை கட்டுப்படுத்தலாம் என கருத்து தெரிவித்தது. மேலும், மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டுமெனவும் கூறியது.

இந்த அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்க வேண்டும். மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைத்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என நீதிபதிகள் பரிந்துரைத்தனர். இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, மதுபாட்டில்களின் விலை பட்டியல் அனைத்து இடங்களிலும் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

டாஸ்மாக் திறக்கும் நேரத்தை குறைப்பது பற்றி நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. அதுபற்றி ஆலோசனை நடத்திய பிறகுதான் சொல்ல முடியும். வாய்மொழியாகவே எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எழுத்துப்பூர்வமான தீர்ப்பு இன்னும் வரவில்லை. நீதிமன்றம் சொல்லும்போது அதனை அமல்படுத்திதான் ஆக வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்போம்” என்றும் கூறினார்.

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *