
யுவராஜ், இளைஞரணித் தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்
“சற்றும் ஏற்புடைய கருத்து அல்ல. இவர்கள் அமைத்திருக்கும் ‘இந்தியா’ கூட்டணி, ஊழலின் ஒட்டுமொத்த முகமாகவே இருக்கிறது. அந்தக் கூட்டணியில் யாருக்குமே ஒருமித்த கருத்து கிடையாது. சனாதனம் குறித்த சர்ச்சையின்போது, மம்தா தொடங்கி கெஜ்ரிவால் வரை மாறுபட்டதைக் கண்கூடாகப் பார்த்தோமே… இவர்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. மத்திய பா.ஜ.க அரசு எந்த ஊழல் புகாரும் இல்லாத ஓர் ஆட்சியை வழங்கிவருகிறது. இதனால் நாட்டின் நன்மதிப்பும் உலக அரங்கில் உயர்ந்திருக்கிறது. கூட்டணியிலிருந்து
அ.தி.மு.க வெளியேறியது பெரும் இழப்புதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதை எப்படி பா.ஜ.க தவறவிட்டது என்பது புரியவில்லை. ஆனால், தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். ‘தமிழ் மாநிலத்தில் ஊழல் தி.மு.க-வுக்கு எதிராக நிற்கும் அ.தி.மு.க-வுடன் நாங்கள் நிற்கிறோம்’ என்பதை எங்கள் தலைவர் அழுத்தமாகக் கூறியிருக்கிறார். வரும் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்குத் தகுந்த பாடம் புகட்டப்படும். வரும் 2024 தேர்தலில் மக்கள் அந்தக் கூட்டணியைப் புறக்கணிக்கப்போவதை இப்போதே ஆரூடமாகச் சொல்கிறேன்!”
நன்றி
Publisher: www.vikatan.com
