#Breaking: கனமழை காரணமாக மதுரையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…!

#Breaking: கனமழை காரணமாக மதுரையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…!

கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள உத்தரவில்; மதுரையில் பெய்து வரும் கன மழை காரணமாக, மாணவர்கள் நலன் கருதி இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *