ஓலா, உபேர் ஓட்டுனர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்..! என்ன ஆச்சி? எதுக்கு இந்த ஸ்டிரைக்?

இன்றைய காலக்கட்டத்தில் சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட பிஷியான நகரங்களில் வாழும் மக்கள் பெரும்பாலான நேரங்களில் ஓலா, உபேர் போன்ற செயலிகள் மூலம் வாடகை கார்களை புக் செய்து அதில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஓலா, உபேர் போன்ற செயலிகள் மூலம் ஒருவர் புக் செய்யும்போது அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கும் கார் டிரைவர்களுக்கு அலார்ட் மெசேஜ் அனுப்பப்படும். இதற்காக குறிப்பிட்ட தொகையை அந்நிறுவனங்கள் கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதி தொகையை அந்த கார் டிரைவர்களுக்கு வழங்குகின்றனர்.

இதுகுறித்து கார் ஓட்டுனர்கள் கூறுகையில், ஓலா, உபேர் நிறுவனங்கள் அதிகப்படியான கமிஷனை எடுத்துக் கொண்டு தங்களுக்கு குறைவான சம்பளத்தையே வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பளம் எங்களுக்கு போதுமானதாக இல்லை என்றும் இந்த நிறுவன செயலியை அரசே எடுத்து நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு போராட்டத்தில் ஈடுப்பட போவதாக ஓலா, உபேர் நிறுவன ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.

Ola Uber drivers strike for 2nd day Whats up Why this strike read it now

அதன்படி, சென்னையில் நேற்று(திங்கட்கிழமை) ஓலா மற்றும் உபேர் கார் ஓட்டுனர்கள் தங்கள் மொபைலில் உள்ள செயலியை நீக்கிவிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்களின் இந்த போராட்டத்தால் ஓலா, உபேர் செயலிகள் மூலம் புக் செய்யும் பயணிகள் பல மணி நேரம் ஆகியும் புக் செய்ய முடியாததால் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயித்தல், பைக் டாக்ஸிகளை தடைசெய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read : YouTube-ல வீடியோ போடுறீங்களா? கேர்புல்லா போடுங்க… மத்திய அரசின் புதிய எச்சரிக்கை…

கார் ஓட்டுனர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டமானது சென்னையில் மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த போராட்டத்தின் மூன்றாவது நாளான புதன்கிழமை பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தை சென்னை எலும்பூர் ராகரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடத்த உள்ளதாகவும் கார் ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஓலா, உபேர் செயலிகளில் அடிக்கடி புக் செய்யும் பயணிகள் புக் செய்ய முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து பல பயணிகள் தங்களது சிரமத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *