அக்டோபர் மாதம் தொடங்கி நான்கு நாள்கள் ஆகிவிட்டது. ‘பத்திர பதிவிற்கு இனி நிலத்தின் புகைப்படம் அவசியம், தெரியுமா?’, ‘சிறுசேமிப்புத் திட்டங்களில் ஆதாரை இணைத்துவிட்டீர்களா?’… இப்படி அக்டோபர் மாதத்தில் நோட் பண்ண வேண்டிய ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.
அவை என்னென்னவென்று பார்க்கலாம், வாங்க…

-
கடந்த செப்டம்பர் 30-ம் தேதியே ரூ.2000 நோட்டை மாற்ற கடைசி தேதி என்றிருந்த நிலையில், தற்போது அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
இந்த மாதம் தொடக்கத்திலிருந்து புதியதாக நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும்போது, அந்த நிலத்தின் புகைப்படமும் பத்திரத்தோடு இடம்பெறுவது அவசியம்.
-
வெளிநாட்டுக்கு செல்லும் இந்தியர்கள் டெபிட் கார்டு அல்லது ஃபாரக்ஸ் கார்டு (Forex card) பயன்படுத்தி ரூ.7 லட்சத்திற்கு மேல் செலவளித்தால் 2023-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் 20 சதவீத டி.டி.எஸ் வரி பிடித்தம்.
-
இந்தியாவில் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனத்திலாவது ரூ.7 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கி வெளிநாட்டில் படிப்பவர்களுக்கு 0.5 சதவீத வரி. ஒருவேளை எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனத்திலும் கடன் வாங்காமல் ரூ.7 லட்சத்திற்கு மேல் செலவு செய்து படிப்பவர்களுக்கு 5 சதவீத டி.டி.எஸ் வரி பிடித்தம்.
-
இந்த மாதத்தின் தொடக்கம் முதல், ரூ.7 லட்சத்திற்கு மேல் செலவளித்து வெளிநாட்டில் ஏதாவது மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் 5 சதவீத டி.டி.எஸ் வரி பிடித்தம்.

-
பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு கணக்கு, சிறுசேமிப்பு ஆகிய திட்டங்களில் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும்.
-
அரசு வேலை, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அட்டை, திருமண பதிவு, பள்ளி மற்றும் கல்லூரியில் சேருவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.
நன்றி
Publisher: www.vikatan.com