திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 14) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் 3 வேலை வாய்ப்பு முகாம்களை நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்துகிறது. 2வது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (அக்டோபர் 14ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் வைத்து நடக்கிறது.
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஐந்தாம் வகுப்பு முதல் 10, பிளஸ் 2 பட்டப்படிப்பு, டிப்ளமோ,ஐடிஐ போன்ற கல்வி தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது சுயவிவரம் கல்வி சான்று,ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் வேலைவாய்ப்பு முகாம் நடக்கும் நாளில் காலை 9 மணிக்கு பங்கேற்கலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பணி நியமனம் பெறும் பதிவு தாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் பெண்கள் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம்” என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
நன்றி
Publisher: tamil.news18.com