இந்தியாவில் கிராமங்கள்தோறும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் மாபெரும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் மூலம் 50 கோடிக்கும் அதிகமான முதலீட்டாளர்கள் உள்ளதாகவும் இரண்டு லட்சம் கோடிக்கும் அதிகமான வைப்பு தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் 66% கணக்குகள் கிராமப்புற மற்றும் அரை நகர்புற பகுதிகளில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 55.5% பெண்கள் தான் கணக்கை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Also Read : என்னது இனிமே இந்த ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் தராங்களா..? தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!
இதையடுத்து, இந்த திட்டத்தில் பயனடையும் பயனாளர்கள் மற்ற வங்கிக் கணக்குகள் போல முதலீட்டாளர்கள் எந்தவித குறைந்தபட்ச தொகையையும் வைத்திருப்பது அவசியம் இல்லை என்றும் முதலீட்டாளர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வங்கி கணக்கில் பணமே இல்லை என்றாலும் கூட ரூபாய் பத்தாயிரம் வரையிலும் முதலீட்டாளர்கள் பெற்றுக் கொள்ளும் படியான சலுகையும் இந்த திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in