பொதுவாக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டுமென்றால் நேரடியாக் வங்கிக்கு சென்றும் அல்லது அருகில் இருக்கும் ஏடிஎம் மையங்களுக்கும் சென்றும் தான் எடுத்து வந்தோம். இந்நிலையில், தற்பொழுது இந்த சேவையை மேலும் எளிதாக்கும் வகையில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இ சேவை மையங்களிலும் இனி பணம் எடுக்கும் படியான புதிய சேவை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள கிராமபுற பகுதிகளிலும் தமிழக அரசின் பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இ சேவை மையங்கள் மூலம், அரசு சார்ந்த பல சான்றிதழ்கள் எடுத்தல், ஆதார் உள்ளிட்ட கார்டுகள் திருத்தம் செய்தல் உள்பட பல்வேறு வசதிகள் உள்ள நிலையில், தற்பொழுது இ சேவை பமையங்கள் மூலமாக பணம் எடுப்பதற்கான தொழில்நுட்பம் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read : நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3ன் தற்போதிய நிலை..! இஸ்ரோ வெளியிட்ட லேட்டஸ்ட்டு அப்டேட்!!
அதன்படி, இ சேவை மையங்களை DigiPay வரம்பிற்குள் கொண்டுவந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இ சேவை மையங்களில் ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. இந்த வசதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
Publisher: jobstamil.in