பொதுவாக தமிழகத்தில் கோடை வெயிலான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே சுட்டெரிக்கும். ஆனால், தற்பொழுது நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் கோடை வெயிலின் தாக்கம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் நீடித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே வெயில் வாட்டி வந்தது.

இதையடுத்து, தமிழகத்தில் மழை எப்பொழுது வரும் வெயிலின் தாக்கம் எப்பொழுது குறையும் என்று மக்கள் புழம்பி வந்த நிலையில், இவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற 17 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
Also Read : மகளிர் உரிமைத் தொகை பணம் வருமா? வராதா? மறுபடியும் உருவான புதிய சிக்கல்! அரசின் முடிவு என்ன?
மேலும், மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக அக்டோபர் 15 ஆம் தேதி முதல் வருகிற 20 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in