இருப்பினும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட டிடிவிக்கு சின்ன தயக்கமிருந்தது. ஏனென்றால், தான் போட்டியிட்டால் பிற தொகுதிகளுக்கு பிரசாரம் செய்ய முடியாது. அதுமட்டுமல்லாது, சட்டமன்றத் தேர்தலில் டிடிவியே தோல்வியடைந்ததால், அமமுக-வுக்கு வெற்றி என்பது தற்போது கட்டாயமான ஒன்றாகும். இந்நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் நின்று, தானே தோல்வி அடையும் நிலை ஏற்பட்டால், கட்சியை மேலும் பலவீனப்படுத்திவிடும் என்று டிடிவி நினைத்தார்.
மேலும், அவர் போட்டியிட தேர்வு செய்த தேனியில் ஓ.பி.எஸ்-ஸின் மகன்களும் குறிவைத்து வேலைப்பார்க்கிறார்கள். இதை தாண்டி அங்கு நின்றால், உள்ளடி அரசியல் அதிகமாக இருக்கும் என்று எண்ணிய டிடிவி தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிட்டார். மேலும் தனது கவனம் சட்டமன்ற தேர்தலில் தான் இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார் . இருப்பினும், அமமுக கட்சி நல்ல கூட்டணி அமைத்து தேர்தலில் நிச்சயம் போட்டியிடும்.” என்றனர் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com