நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெற இருந்ததைத் தொடர்ந்து மேயர் சரவணனின் வாகனம் நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கவுன்சிலர்கள் வராததால் கூட்டம் கைவிடப்பட்டதால் தீர்மானம் தோவியடைந்ததாக கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து மேயரின் வாகனத்தை மீண்டும் வாகன ஓட்டுநர் மேயரின் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.


நெல்லை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கல் இடையே நடந்த மோதல் போக்கால் மக்கள் நலப்பணிகள் முடங்கிக் கிடந்த நிலையில், இனியாவது சாலை வசதி, குடிநீர், பாதாளச் சாக்கடை உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டுமா என்கிற எதிர்பார்ப்பு நெல்லை மாநகர மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ”தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது” என்கிற பழமொழிக்கு ஏற்ப தனக்கு ஏற்பட்ட சோதனையில் இருந்து விடுபட்ட நிம்மதி மேயர் சரவணனுக்கு ஏற்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com