மேலும், இந்த தாக்குதல் குறித்து தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம், “அதிகரித்து வரும் இந்த நெருக்கடிக்கு வட கொரியா முழு பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம். அதோடு, இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும் கடுமையாக வலியுறுத்துகிறோம். எங்களின் ராணுவம் அமெரிக்காவுடன் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. அதற்கேற்றவாறு, வட கொரியாவின் ஆத்திரமூட்டல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று கூறியிருக்கிறது.


அதேசமயம், Baengnyeong, Yeonpyeong தீவுகளின் உள்ளூர் அதிகாரிகள், தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, தங்கள் பகுதியிலிருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் உத்தரவிட்டிருக்கின்றனர். இந்த தாக்குதல் குறித்து உள்ளூர் ஊடகத்திடம் பேசிய Baengnyeong தீவின் குடியிருப்பாளர் ஒருவர், “முதலில் இது எங்களின் சொந்த ராணுவத்தால் வீசப்பட்ட குண்டுகள் என்று நான் நினைத்தேன். ஆனால், பின்னர்தான் அது வட கொரியாவால் வீசப்பட்டது என்று கூறப்பட்டது” என்றார்.


நன்றி
Publisher: www.vikatan.com