14,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கும் நோக்கியா நிறுவனம்..!! விற்பனை சரிந்ததால் அதிரடி முடிவு..!!

14,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கும் நோக்கியா நிறுவனம்..!! விற்பனை சரிந்ததால் அதிரடி முடிவு..!!

பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியா, 14,000 தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக பின்லாந்தை சேர்ந்த நோக்கியா இருந்து வருகிறது. நோக்கியா தயாரிக்கும் செல்போன்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. பின்லாந்து மட்டுமின்றி அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் நோக்கியாவிற்கு அலுவலகங்கள் உள்ளது. இதில், 86,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், வடஅமெரிக்க நாடுகளில் கடந்தாண்டு நோக்கியாவின் 5ஜி செல்போன்களின் விற்பனை 19% வரை சரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்நிறுவனம் சுமார் 800 மில்லியன் யூரோக்கள் முதல் 1.2 பில்லியன் யூரோக்கள் வரை செலவீனத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இதனை எட்டும் வகையில் 2026-க்குள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் லன்ட்மார்க் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, 14,000 ஊழியர்களை அமெரிக்காவில் மட்டும் பணியில் இருந்து நீக்க நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவு தொழில்நுட்பத் துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *