Today Breaking News 2023

இந்தியா முழுவதும் உள்ள அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும். மேலும், இந்த விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகளின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்து வருகிறது. அதன் படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிர்னா கூட்டுறவு வங்கி லிமிடெட் என்கிற வங்கியின் உரிமத்தை தற்போது ரிசர்வ் பேங்க் ரத்து செய்துள்ளது.
மேலும், இந்த கிர்னா கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் பணத்தை வாடிக்கையாளர்கள் திரும்ப பெறமுடியாது எனவும், இதற்கு பிறகு செய்யும் டெபாசிட்களை ஏற்க்கவும் முடியாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வங்கியில் டெபாசிட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சடைந்துள்ளனர்.
நன்றி
Publisher: jobstamil.in