எவ்வளவு சொல்லியும் கேட்கலல்ல, இதற்கு தான ஆசைப்பட்ட….?மனைவியின் கள்ளக்காதலன் தலையை வெட்டி எடுத்துச் சென்ற கணவர்….!

பொதுவாக திருமணத்தை மீறிய உறவு என்பது தற்போது அதிகரிக்க தொடங்கி விட்டது. இதன் காரணமாக, பல்வேறு குடும்பங்களும் சீரழிந்து வருகின்றன. இதனால் பல குழந்தைகள் நிற்கதியாக நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த விதத்தில், தென்காசி மாவட்டத்தில், ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது, தென்காசி பகுதியில் இருக்கின்ற கண்ணாடிக் குளம் என்ற கிராமத்தில் வேலுச்சாமி, இசக்கியம்மாள் தம்பதிகள் வசித்து வருகிறார்கள். வேலுச்சாமியின் மனைவிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

முதலில் நண்பர்களாக பழக தொடங்கிய இவர்கள், பின்னாளில் நெருங்கி பழக தொடங்கி, அதன் பிறகு, அவர்களுக்கிடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. அதன் பிறகு, வேலுச்சாமி வீட்டில் இல்லாத நேரத்தில் முருகன் அடிக்கடி இசக்கியம்மாள் உடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த விவகாரம் வேலுச்சாமிக்கு தெரிய வந்தவுடன், தன்னுடைய மனைவியை கடுமையாக கண்டித்திருக்கிறார். ஆனாலும் கணவரின் கண்டிப்பு அவரை கட்டுப்படுத்தவில்லை. மாறாக வழக்கம் போல தன்னுடைய கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த வேலுச்சாமி, ஒரு அதிரடி முடிவை மேற்கொண்டார். இதன் காரணமாக, இசக்கியம்மாள் அதிர்ச்சி உறைந்து போனார். அதாவது இசக்கி அம்மாவின் கள்ளக்காதலனான முருகனின் தலையை தூண்டாக வெட்டி எடுத்துச் சென்று, தன்னுடைய மனைவியிடம் காட்டியுள்ளார். இதை பார்த்து ஒரு கணம் உறைந்து போனார் இசக்கியம்மாள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *