சனாதன விவகாரம் தொடர்பாக பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றில், மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசிய கருத்து, அ.தி.மு.க-வினரிடையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது. அண்ணாமலையின் தொடர்ச்சியான கருத்துகளால் பலமுறை அவரை அ.தி.மு.க கண்டித்து வந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை. இதுவே கட்சியின் நிலைப்பாடு. அண்ணாமலைக்கு தலைமைக்கான தகுதியே இல்லை” என்று செப்டம்பர் 18-ம் தேதி கூறியிருந்தார்.


அதன் பிறகு கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை என இரு தரப்பிலிருந்தும் பேச்சுகள் வந்தன. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வைச் சேர்ந்த வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் டெல்லிக்கு விரைந்து, இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க தலைவர்களிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com