"ஆட்சி மாறியும் நிலைமை மாறல..!" – வேகமெடுக்காத

அந்த நேரத்தில் ஆளுநர் மாளிகையும் குற்றம்சாட்டப்பட்டதால் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்தார். இங்கு வந்து 3 நாள்களில் விசாரணையை முடித்து விட்டு சென்று விட்டனர். அப்போதிருந்த துணைவேந்தர் செல்லத்துரை வேறொரு வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரிடமும் விசாரிக்கவில்லை. 

சிறையிலிருந்த நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமிக்கு பல வகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. முதலில் தாங்கள் பலிகடாவாக ஆக்கப்படுள்ளோம் என்று கூறி வந்தவர்கள் பின்பு ஜாமீனில் வெளியே வந்தார்கள். நிர்மலாதேவிக்காக ஆஜராகிய வழக்கறிஞர்கள் மாறிக்கொண்டே இருந்தனர்., அந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. கடந்த 2018-ல் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கு விசாரணை வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் இருந்த வேகம் கூட இல்லை என்பதே உண்மை. 

செல்லத்துரைக்கு பிறகு மற்றொரு துணை வேந்தர் வந்தார். அவருக்கு பிறகு தற்போது ஜெ.குமார் வந்துள்ளார். இவருக்கு நிர்மலா தேவி வழக்கு குறித்து முழுமையாக தெரியாது. பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர்களிடையே ஊதிய முரண்பாடு, மாணவர் பிரச்னைகள் என வேறு சில பிரச்னைகள் போய்க் கொண்டிருப்பதால் துணைவேந்தர் அதை கவனிக்கவும் இல்லை. எனவே பல்கலைக்கழக அறையில் நிர்மலா தேவி வழக்கு குறித்த விவரங்கள் உறங்கிக் கொன்டிருக்கிறது.

ஜெ.குமார்ஜெ.குமார்

ஜெ.குமார்
காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர்

எல்லாவற்றுக்கும் மேலாக, நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி என இந்த 3 பேரை மட்டுமே குற்றவாளிகளாக்கி விட்டு சிபிசிஐடி தன் கடமையை முடித்துக் கொண்டது. இந்த வழக்கில் பல முக்கிய குற்றவாளிகள் தப்பிவிட்டனர் என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உள்ளது. இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

இதுகுறித்து காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமாரிடம் கேட்டதற்கு, “அந்த காலகட்டத்தில் நான் பொறுப்பில் இல்லை, முழு விவரங்கள் தெரியாது, உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்களிடம் ஆலோசித்துவிட்டு பேசுகிறேன்” என்றார்.

உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் சிறப்பு கமிட்டியை அமைத்து குட்டு வைப்பதற்கு முன்பாக சுதாரித்துக் கொள்ளுமா தமிழ்நாடு அரசு?!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *