மேகமலையில் கொட்டிய மழை நிரம்பி வழியும் அணைகள்

The dams are overflowing from the rains in Meghamalai   மேகமலையில் கொட்டிய மழை  நிரம்பி வழியும் அணைகள்

கம்பம்: மேகமலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருவதால் இங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேகமலை பகுதியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் கூடுதல் மழை கிடைக்கும்.

ஆண்டு தோறும் அக்டோபரில் கிடைக்க வேண்டிய மழை, இந்தாண்டு நவம்பரில் கிடைத்து வருகிறது. சில வாரங்களாக சாரல் தொடர்ந்த போதும், பெரிய அளவில் மழை இல்லை. ஆனால் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்ய துவங்கியுள்ளது.

இதனால் இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகள் நிரம்பியது. உபரி நீரை பி.வி.4 வாய்க்கால் வழியாக முல்லைப்பெரியாற்றிற்கு திருப்பி உள்ளனர். ஒரு பகுதி தூவானம் வழியாக சுருளி அருவிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

மேகமலை உபரி நீர் வருவதால், முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. மேகமலை தண்ணீர் கிடைப்பதால், அணையிலிருந்து எடுக்கும் தண்ணீரின் அளவை 1300 கனஅடியிலிருந்து 511 கனஅடியாக அதிகாரிகள் குறைத்துள்ளனர்.

மேகமலையில் உள்ள மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘சுருளியாறு மின்நிலையத்தில் இன்னமும் உற்பத்தி துவங்காததால், உபரி நீரை முல்லைப்பெரியற்றுக்கு திருப்பி விடுகிறோம்’என்றனர்.

கம்பம்: மேகமலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருவதால் இங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.மேகமலை பகுதியில் வடகிழக்கு பருவமழை காலத்தில்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.
-->