திண்டுக்கல் பாலக்காடு அகல ரயில் பாதை தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் போதுமான ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள பழநி முக்கியமான வழிபாட்டுத் தலமாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. பழநியில் நடைபெறும் திருவிழாக்களில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் அடிக்கடி பழநிக்கு வந்து செல்கின்றனர்.
இவர்களில் அதிகமான பக்தர்கள் பஸ்சில் தான் பயணிக்கின்றனர். பழநியில் இருந்து திருச்சி வழித்தடத்தில் இதுவரை ஒரு ரயிலும் இயக்கப்படவில்லை.
பழநியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணத்திற்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டால் பலருக்கும் பயன் உடையதாக இருக்கும். கும்பகோணம் பகுதியை சுற்றிய நவக்கிரக கோயில்களை இணைக்கும் வகையில் ரயில்களை இயக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். பழநியில் இருந்து திண்டுக்கல் ஜங்ஷன் வந்தடையும் ரயிலின் முன்புறம் உள்ள இன்ஜினை கழற்றி ரயிலின் பின்புறம் கொண்டு வந்து இணைத்துத்தான் திருச்சிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், இந்த மார்க்கத்தில் இரட்டை இஞ்சின்கள் பொருத்தப்பட்டு ரயில்களை இயக்கலாம்.
மேலும் தீபாவளியை முன்னிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சொந்த ஊருக்கு திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், சென்னை எக்மோரில் இருந்து திருச்சி, திண்டுக்கல், பழநி வழியாக பொள்ளாச்சிக்கு ஒரு சிறப்பு ரயிலை இயக்க வேண்டும்.
இதேபோல் கோவையிலிருந்து தென் மாவட்டங்களை இணைப்பதற்கும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.
திண்டுக்கல் பாலக்காடு அகல ரயில் பாதை தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் போதுமான ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள பழநி முக்கியமான வழிபாட்டுத் தலமாக
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement