போடி:போடியில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் 3 கி.மீ., தூரம் நடை பயிற்சியில் கலெக்டர் ஷஜீவனா ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
போடியில் நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி நிகழ்ச்சி கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, கமிஷனர் ராஜலட்சுமி, துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, பொறியாளர் குணசேகரன், சுகாதார அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகராட்சித் தலைவர் சங்கர், கவுன்சிலர்கள் உட்பட பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
நடைபயிற்சி போடி நகராட்சியில் துவங்கி, முந்தல் ரோட்டில் ஆண்டி ஓடை வரை சென்று மீண்டும் நகராட்சி வரை 3 கி.மீ., தூரத்தில் நிறைவடைந்தது. நடை பயிற்சி முடிந்த பின் ரோட்டின் இருபுறமும் மரக்கன்றுகள் நடவும், நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் விளம்பர பலகை வைக்கும்படி அறிவுறுத்தினார்.
போடி:போடியில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் 3 கி.மீ., தூரம் நடை பயிற்சியில் கலெக்டர் ஷஜீவனா ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.போடியில் நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement