மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் 130 ஊராட்சிகள் உள்ளன. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க பணிகள் ஐந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஊரகப் பகுதிகளில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தனிநகருக்கும் தினமும் 55 லிட்டம் நீர் வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில் ரூ.190.95 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கடமலை-மயிலாடும்பாறை ஒன்றியத்தை தவிர மற்ற பகுதிகளில் 80 சதவீதத்திற்கு அதிகமான பணிகள் முடிந்துள்ளன. மாவட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கியதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. ஆனால், பல ஊர்களில் குழாய்கள் காட்சிப்பொருளாக மட்டும் காட்சியளிக்கின்றன. தெருக்குழாய்களாக இருந்தவை தற்போது வீட்டு இணைப்புகளாக வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் ஊரக வளர்ச்சித்துறை குழாய் அமைக்கும் பணியை மேற்கொண்டும், அதற்கு குடிநீர் வடிகால் வாரியம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. சில ஊராட்சிகளில் சமூக விரோதிகள் குழாய்களை உடைத்து சேதப்படுத்துகின்றனர். சில ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்ட குழாய்களில் சில தெருக்களில் மட்டும் குடிநீர் வருவதும், மற்ற தெருக்களில் குடிநீர் வராமலும் உள்ளன என பரவலாக மக்கள் புகார் கூறுகின்றனர். தேனி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் இதே நிலை நீடிக்கிறது.
ஊராட்சி செயலாளர்கள் கூறுகையில், மக்கள் பங்களிப்புத்தொகையுடன் இத்திட்டம் செயல்படுத்த வேண்டி உள்ளது. ஆனால் அதிகாரிகளின் அழுத்தத்தால், மக்களிடம் பங்களிப்புத்தொகை செலுத்தாமல் குழாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால், பொதுமக்கள் பங்களிப்புத்தொகை செலுத்த மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
அது போல் நீர் ஆதாரங்களில் தண்ணீர் இன்றி மக்களுக்கு போதிய குடிநீர் வழங்க முடிவதில்லை,என்கின்றனர்.
மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் 130 ஊராட்சிகள் உள்ளன. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க பணிகள் ஐந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement