மதுரை : மதுரை நகரில் அகலப்படுத்தப்பட்ட பைபாஸ் ரோட்டில் ஆக்கிரமிக்க வழி ஏற்படுத்தி செயற்கையான நெரிசலை, விபத்தை ஏற்படுத்தி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிகாரிகளே காரணமாக உள்ளனர்.
நகரின் நெரிசலை தவிர்க்க 4 கி.மீ., தொலைவுக்கு ஆறுவழிச்சாலையாக பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. ஒருபுறம் எஸ்.எஸ்.காலனி, எல்லீஸ்நகர், மறுபுறம் துரைசாமி நகர், வேல்முருகன் நகர், சந்திரகாந்திநகர், சொக்கலிங்கநகர், எஸ்.பி.ஓ.ஏ., காலனி, பொன்மேனி புதுார் என குடியிருப்புகள் பெருகின. பல்வேறு நிறுவனங்கள், ேஷாரூம்கள், கடைகள் பலவும் பைபாஸ் ரோடு பகுதிக்கு வந்தன. இன்று பிரதான வணிக பகுதியாக மாறிவிட்டது.
இதனால் ரோட்டோர கடைகள் புற்றீசல் போல் பெருகின. பெரியார் பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கப்பட்டபோது, அங்கிருந்த 250க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இப்பகுதிக்கு தற்காலிகமாக கடை வைக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட ஆரம்பித்தது. தவிர, வெள்ளிக்கிழமை தோறும் சர்வீஸ் ரோட்டில் காய்கறி சந்தையை மாநகராட்சி நடத்தி தன் பங்குக்கு மக்களையும், வாகன ஓட்டிகளையும் சிரமப்படுத்தி வருகிறது. எனக் கருதிய மாநகராட்சி வெள்ளிக்கிழமை மார்க்கெட் நடத்தவும் அனுமதி வழங்கியது. இதனால் பைபாஸ் ரோட்டின் நோக்கமே சின்னாபின்னமாகிவிட்டது.
அதிகாரிகள் ‘அக்கறை’
‘பட்டுச்சேலையை இரவல் கொடுத்து, உட்கார பலகையையும் சுமந்து திரிவது’ போல, அதிகாரிகளில் சிலர் ஆக்கிரமிக்க அனுமதியும் வழங்கி, அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுப்பதால் போக்குவரத்தை இஷ்டத்திற்கு கஷ்டப்படுத்துகின்றனர். அதனை அகற்ற அதிகாரிகள் வரும்போது, முன்கூட்டியே தெரியப்படுத்தி பணிமுழுமை பெறாமல் பாதுகாப்பதும் தொடர்கிறது.
சமீபத்தில் காளவாசல் முதல் போடிலைன் மேம்பாலம் வரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டை அகலப்படுத்தி இருபுறமும் பேவர் பிளாக் கற்களை பதித்து வருகின்றனர். தவிர இப்பகுதி ஆர்.டி.ஓ., அலுவலகம் நாகமலைபுதுக்கோட்டைக்கு மாற உள்ளது. அதன்பின் அகலமாக்கப்படும் ரோட்டை ‘பட்டா’ போட இப்போதே சிலர் தயாராகி வருகின்றனர்.
தீர்வு இருக்கு
ஆக்கிரமிப்பு கடைகளை போக்குவரத்து இல்லாத இடத்திற்கு மாற்றலாம். போடி லைன் மேம்பாலத்தின் இருபுறமும் அரை கி.மீ., துாரத்திற்கு காலியிடம் உள்ளது. அதில் கடைகளை நடத்தினால் யாருக்கும் இடையூறு இருக்காது. பொதுமக்களின் நலனில் அக்கறை இருந்தால், அங்கு மாற்றலாம். மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் துறைகள் கலெக்டரின் தலைமையில் பேசினால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.
மதுரை : மதுரை நகரில் அகலப்படுத்தப்பட்ட பைபாஸ் ரோட்டில் ஆக்கிரமிக்க வழி ஏற்படுத்தி செயற்கையான நெரிசலை, விபத்தை ஏற்படுத்தி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிகாரிகளே காரணமாக உள்ளனர்.நகரின்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement