கடைகள் வாடகை, சொத்துவரி, குடிநீர்வரி, பாதாளசாக்கடை வரி, குத்தகை உட்பட பல்வேறு இனங்கள் மூலம் ஆண்டிற்கு ரூ. 500 முதல் ரூ.600 கோடி வருவாய் கிடைக்கிறது. சொத்து வரி மட்டும் ரூ. 280 கோடி வரை வசூலிக்க வேண்டியுள்ளது. தற்போது பல கோடி வருவாய் வசூலிக்க முடியாமல் நிலுவையில் உள்ளதால் மாநகராட்சியில் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது.
இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த வருவாய் பிரிவு உதவி கமிஷனர் பதவியை 3 ஆண்டுகளாக மண்டல ஏ.சி.,க்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி, அதிகாரிகளை ‘இரட்டை சவாரி’ செய்ய வைக்கிறது மாநகராட்சி. இதனால் மாநகராட்சி வருவாயை பெருக்குவது, நிலுவை வரிகளை வசூலிப்பது, கமிஷனருக்கு தேவையான வருவாய் ஆவணங்களை தயாரித்து வழங்குவது உள்ளிட்ட பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதுபோன்ற காரணங்களால் மாநகராட்சியும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
அதிகாரிகள் கூறியதாவது: ஏ.சி.,க்கள் சிலர் ஏற்கனவே கூடுதல் பொறுப்புகளுடன் தான் பணியாற்றுகின்றனர். மண்டல ஏ.சி., பணி கடும் சுமையாக இருக்கும்.
வார்டுகள் ஆய்வு, பொட்டல் வரி உள்ளிட்ட வரி நிர்ணயம், கட்டட அனுமதி ஆவணங்களுக்கு அனுமதி வழங்குவது என பணிச்சுமையால் மன உளைச்சலில் தவிக்கின்றனர். இதைவிட கூடுதல் பணிச்சுமை உள்ள வருவாய்த்துறை ஏ.சி., பதவியும் கூடுதல் பொறுப்பாக வழங்குவதை மாநகராட்சி இனியாவது கைவிட வேண்டும்.
முக்கியத்துவம் வாய்ந்த இப்பணிக்கு தனியாக உதவி கமிஷனர் நியமிக்க கமிஷனர் பிரவீன்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், என்றார்.
கடைகள் வாடகை, சொத்துவரி, குடிநீர்வரி, பாதாளசாக்கடை வரி, குத்தகை உட்பட பல்வேறு இனங்கள் மூலம் ஆண்டிற்கு ரூ. 500 முதல் ரூ.600 கோடி வருவாய் கிடைக்கிறது. சொத்து வரி மட்டும் ரூ. 280 கோடி வரை வசூலிக்க
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement