வடமதுரை,-திண்டுக்கல் மாவட்டத்தில் நான்குவழிச்சாலையில் விழும் ஜல்லி கற்கள், விபத்தில் சிக்கி இறக்கும் நாய் போன்றவற்றின் உடல்கள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கும் நிலையால் டூவீலர், சிறிய ரக வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி பாதிக்கின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து மதுரை, நத்தம், திருச்சி, கரூர், பழநி போன்ற ஊர்களுக்கு செல்லும் ரோடுகள் தற்போது நான்குவழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. போக, வர என இரு தனித்தனி வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் வேகமும் அதிகமாக உள்ளது. குறிப்பிட்ட இடங்களில் வாகனங்களின் வேகத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தாலும் சில வாகன ஓட்டிகள் பொருட்படுத்தாமல் செல்வதால் விபத்துகள் நடக்கின்றன.
ரோடு பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ள பேரி கார்டுகளால் வேகமாக வரும் வாகனங்கள் இப்பகுதியில் வேகத்தை குறைக்க பிரேக் போடும்போது லாரி போன்றவற்றில் உள்ள கற்கள், தென்னை மட்டைகள், விறகுகள், செங்கல் என பலவித பொருட்கள் கிழே விழுந்து அப்படியே அப்புறப்படுத்தாமல் கிடப்பில் விடப்படுகின்றன. இவற்றின் மீது டூவீலர்கள் ஏறும்போது தடுமாற்றம் ஏற்பட்டு அருகில் செல்லும் வாகனங்களுடன் மோதி கொடூர விபத்துக்கு ஆளாகிறார்கள் . சுங்கசாவடிகள் மூலம் வாகனங்களிடம் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்கின்றனர். டூவீலர்களிடம் கட்டண வசூல் இல்லை. இதனால் டூவீலர் வாகன ஓட்டிகளை பாதுகாப்பதில் சுங்கச்சாவடி நிர்வாகங்களுக்கு ஆர்வம் இல்லையோ என்ற சந்தேகமும் மக்களிடம் உள்ளது. இதுபோன்ற நெடுஞ்சாலை ஆபத்துகளை தடுக்க ரோடுகளில் கிடக்கும் இது போன்ற பொருட்களை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
……………
கவனம் செலுத்தலாமே
நான்கு வழிச்சாலையை பயன்படுத்த ஆங்காங்கே நெடுஞ்சாலை ஆணையம் சுங்கசாவடிகளை அமைத்து வசூலில் அதிக கவனம் செலுத்துகிறது. ஆண்டுதோறும் கட்டண உயர்வும் செய்கின்றனர். அதே அளவிற்கு பயன்படுத்துவோரின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பல இடங்களில் ரோட்டோரங்களில் மணல் பெருமளவில் தேங்கி கிடக்கிறது. லாரிகளில் இருந்து விழுந்த பலவித பொருட்கள் அப்படியே கிடக்கின்றன. இதுதவிர நாய், ஆதரவற்ற மாடு போன்ற சில உயிரினங்களும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன. இவையும் முறையாக அகற்றப்படாமல் அதே இடங்களில் கிடந்து பல நாட்கள் வரை துர்நாற்றம் வீசுகின்றன. இரவு நேரங்களில் இருளில் இவை கிடப்பது தெரியாமல் இதன் மூலம் ஏறும் டூவீலர்கள் விபத்தில் சிக்கி விழும் நிலை தொடர்கிறது. சுங்கசாவடிகள் மூலம் கட்டணம் வசூல் செய்யும் நெடுஞ்சாலை ஆணையம் இவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.
-வி.எஸ்.கார்த்திகேயன், தி.மு.க., மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர், வடமதுரை.
…………..
–
வடமதுரை,-திண்டுக்கல் மாவட்டத்தில் நான்குவழிச்சாலையில் விழும் ஜல்லி கற்கள், விபத்தில் சிக்கி இறக்கும் நாய் போன்றவற்றின் உடல்கள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கும் நிலையால் டூவீலர்,
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement